தகர்க்கவே பிம்பங்கள்

​பிம்பங்களை கட்டமைப்பது
நிகழ்ந்தவண்ணமே இருக்கும்
பிம்பங்களை மென்மேலும்
கட்டியமைத்து பூதாகரமாகுத்தல்
தொடர்ந்து கொண்டிருக்கும்

பிம்பத்தின் நிழலில்
இளைப்பாறுதலும்
அசட்டையாய் அமர்ந்து
சோம்பலில் சாய்ந்து
துணைகளை ஈர்த்து
ஒளிந்து கொள்தல்
தப்பித்துக் கொள்ளும்
மனோபாவமே

இறுதியில், பிம்பம்
அதனை கட்டமைத்து
காலிடியில் கிடப்பவரை,
நசித்து அழித்து-பின் 
நொருங்கியே தீரும்

இந்த காலத்தின்
கட்டாய கட்டளையை
உணர்ந்து பிம்பம்
உங்களை உடைப்பதற்குள்
அதனை உடைத்தெறிந்து
உண்மையை நோக்கி
நகர்தலே பரிணாமம் !

No comments:

Post a Comment