மழலைச்சொற்கள்
தமிழ்த்தாயிடம் யான் கதைக்கும் எந்தன் குதலைமொழிகள்...
கனவு
நானோ சுயநலவாதி ஆனேன்
இமைகள் பிரிந்து நாம் இணைய கண்டேன்
நீயோ பாடம் புகட்டினாய்
இமைகள் இணைந்தால் மட்டுமே காட்சியளித்து...
-கனவினில்!!!!
கவிதை
கண்களால் விதைக்க பட்டு,
நினைவுகளால் நீருற்றி,
அறிவினால் அறுவடை செய்து,
வார்த்தையால் விற்கப்படுவது....
-கவிதை....
மறந்துவிடாதே
நிலையான நிலை எட்ட,
நில்லாத தொடரோட்டம்,
நித்தம் நித்தம் போராட்டம்,
நிலையில்லா வாழ்க்கை
என்பதை மறந்துவிட்டு.
ஹைக்கூ
சாதிக்க இயலாததை சாதித்ததாய் பெரும் மகிழ்ச்சி
பெயரிலேயே தெரிகிறது
"ஹை"க்கூ!!!
புதுக்கவிதை
எதுகை, மோனை, சந்தம், முரண்,
இயைபு இவைகள் இணைவது கவிதை என்றால்
இவ்வுலகின் சிறந்த கவிதை "மௌனம்" தான்
அதனால் தான் என்னவோ
எதை கூற முற்பட்டாலும்
இதையே கூறி திரும்பிகிறேன்!!!
இன்றைய கல்வி
அறியாமையை விரட்ட
பள்ளிக்கு அனுப்புகின்றனர்
"
அறியாமையால்
"....
ஆசை
நான் உன்னை பின்தொடருவது போல
என் பெயரும் தொடரட்டும்
உன் பெயருக்குப் பின்னால்!!!
சுதந்திரம்
இந்தியா ஏழை நாடல்ல
ஏழையாக்கப் பட்ட நாடு
நேற்று அன்னியனால்
இன்று
இந்தியனால்
!!!!
கா(சா)தல்
மலரினும் மெல்லிது உன் இதயம்
அதில் எப்பொழுது என் உதயம்
உனக்காக செய்வேன் எதையும்
நீ மறுத்தால் என் உயிர் சிதையும்:-(
நகல்
இன்றைய காதல்
காகிதப் பூக்கள்
அழகுக்கு குறைவில்லை
ஆயினும் பயனில்லை...
பயன்?
உன் பிம்பம் காணா கண்கள் இருந்து என்ன பயன்???
உன் வார்த்தைகள் கேட்கா செவி இருந்து என்ன பயன்???
உன்னுடன் பேசா நாவிருந்து என்ன பயன்???
உன் சுவாசம் நுகரா நாசி இருந்து என்ன பயன்???
உன் மெய் என் மெய்யுடன் இணையா விடில் இப்பிறவி எடுத்து என்ன பயன்??
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)