கவிதை

அந்த மரத்துல
அந்த கிளையில

பஞ்சவர்ணக் கிளின்னு
ராமு சொன்னான்

பச்சைக் கிளின்னு
ராசு நின்னான்

நொண்டிக் கொக்குன்னு
பாலு சொல்ரான்

அண்டங் காக்கான்னு
பாபு துள்ரான்

அந்த மரத்துல
அந்த கிளையில

அதே நொடியில
அந்த காட்சிய

அப்படியே நிறுத்தயில
அது பறவையில்ல
பறவையில்ல
"கவிதை"

பொங்கல் வாழ்த்துக்கள்

தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களின் எச்சமாக மிச்சமுள்ளது பண்டிகைகளின் கொண்டாட்டங்களாகிய விழாக்களே... அந்நியசத்தி, அரசியல்சத்தி, அநியாயசத்தி, அறியாமைசத்தி, அலச்சியசத்தி  என அனைத்து  அனாவசிய சதிகளும் சத்திபெற்று நமது உணர்வுகளை மென்று தின்று தீர்த்தும் பசி வேட்கை அடங்காது மீதமுள்ளவற்றையும் தின்ன எத்தனித்துக்  கொண்டிருக்கையிலே, நம் தமிழர் விழாக்களில் தலையாய விழாவாகிய பொங்கல் திருவிழாவின் இன்றியமையாமையையும் அதன் தொடர்சியாகிய அனைத்து  நிகழ்வுகளையும் கொண்டாடி மகிழ்வதுடன், அடுத்துவரும் அத்துணை தலைமுறைக்கும் விட்டுச்செல்வோம் !

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், தைத்திருநாள் , தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!  


கவியின் தோற்றம்

ஞாயிறு முளைக்குது
ஞாயிறு முளைக்குது
என் சிந்தைக்குள்ளே
மிளிர்ந்து சொலிக்குது

திங்கள் திரியுது
திங்கள் திரியுது
என் அகத்திணை
அடக்க திமிர்ந்து திரியுது
ரத்தநாளங்கள் சுற்றி தேயுது
ஞாயிறை தணிக்க
நித்தம் நெருங்கி வளருது

பிராணன் தவிக்குது
பிராணன் தவிக்குது
ஞாயிறு திங்களில்
சுழன்று தவிக்குது

நீர் சுரக்குது
நீர் சுரக்குது
காயக்கடல் அலை
புரண்டு பிறக்குது
கண்களில் கழன்று
கட்டவிழ்ந்து கொட்டுது

வையமென் வழியே
வழிகேட்டு விழிக்குது
திக்கற்று கிடக்குது
ஏங்கி தவிக்குது

இயற்கையும்
இயற்கைசக்தியும்
திமிர்ந்து எழுந்து
கரம் வழி
புறம் விழுந்தோடுது

இனி நில்லாது
நடக்கும் எம்கவி
இதில் செழித்து
தழைக்கட்டும் இப்புவி !!!

இருத்தல்

இருத்தலை உணர்தல் இயங்குதல்
இயங்கி கொண்டேயிரு
இல்லையேல் இறந்துவிடு
இமைப்பொழுதேனும் இயக்கம் நிற்பின்
இதயம் நிற்கும் !!!