மீள் துவக்கம்

உலகம் ஒலி எழுப்ப
கற்றுக்கொள்ளாத பொழுது
பிறந்தது எங்கள் மொழி

வையத்து மக்கள் எல்லாம்
கண்ணற்று கிடந்தபொழுது
கல்விக்கூடம் அமைத்தவர்கள்
எம் அருமை மக்கள்

அறிவென்ற ஒன்றை
உணராத பொழுது
ஆராய்ச்சி செய்து
ஆச்சிர்யங்கள் நிகழ்த்தினார்

உணவின்றி தவித்த பொழுது
சுவைமிக்க காப்பியம்
படைத்து இன்புற்றனர்

உலகம் கண்விழுத்துவிட்ட பின்
ஏன் கண்ணயர்ந்து போகிறீர்

சாதித்துவிட்ட களைப்பா?
இது, ஓய்வா? உறக்கமா?
அல்ல மரணமா?

இன்னும் ஒருகணம் கூட
தாமதிக்க வேண்டாம்
எழுந்து ஓட துவங்கிவிட்டோம்
புதிய பல பிரபஞ்சம் படைக்கும்
பணியை மேற்கொள்வோம்
இச்சகத்தை முத்திக்கு
அழைத்து சென்றவுடன்!