அர்த்தம்

காகம் கரைந்தால்,
விருந்தினர் வருவதாக அர்த்தம்.
மயில் ஆடினால்,
மழை வருவதாக அர்த்தம்.
நரி ஊளையிட்டால்,
அதிர்ஷ்டம் வருவதாக அர்த்தம்.
நாய் ஊளையிட்டால்,
கூற்றுவன் வருவதாக அர்த்தம்.
பல்லி கத்தினால்,
நன்மை வருவதாக அர்த்தம்.
வௌவால் கத்தினால்,
தீமை வருவதாக அர்த்தம்.
குயில் கூவினால்,
இசை வருவதாக அர்த்தம்.
சேவல் கூவினால்,
சூரியன் வருவதாக அர்த்தம்.

என ஏனைய உயிர்களின் ஒலிக்கு
சரியும்,தவறுமாய் -அர்த்தம்
தேடும் மனிதா உன் ஒரு
சொல்லுக்கும் இல்லை அர்த்தம்.
பிறர்க்காக நீ சிந்தும் கண்ணீர் உன்
வாழ்க்கைக்கு சேர்க்கிறது அர்த்தம்.
பிறர் கண்ணீர் நீ துடைத்தாள்
நீ இறைவன் என்றே அர்த்தம்...