யோக்கிதை

தன்மீது எழும் கேள்விகளுக்கு
ஊர் அறிந்த திருடர்களை
ஒப்பிட்டு விடைதரும் பாங்கு
உணர்த்துகிறது அவர்களது
உண்மை யோக்கிதையை !

என் நிலை

உண்மையை உரக்க சொல்வேன் யான்
உலகிற்கு உறைத்திட செய்வேன் - என்
உயிரினை மயிரென மதிப்பேன் பின்
உலகினை உயிர்பித்து சாவேன் !

தகர்க்கவே பிம்பங்கள்

​பிம்பங்களை கட்டமைப்பது
நிகழ்ந்தவண்ணமே இருக்கும்
பிம்பங்களை மென்மேலும்
கட்டியமைத்து பூதாகரமாகுத்தல்
தொடர்ந்து கொண்டிருக்கும்

பிம்பத்தின் நிழலில்
இளைப்பாறுதலும்
அசட்டையாய் அமர்ந்து
சோம்பலில் சாய்ந்து
துணைகளை ஈர்த்து
ஒளிந்து கொள்தல்
தப்பித்துக் கொள்ளும்
மனோபாவமே

இறுதியில், பிம்பம்
அதனை கட்டமைத்து
காலிடியில் கிடப்பவரை,
நசித்து அழித்து-பின் 
நொருங்கியே தீரும்

இந்த காலத்தின்
கட்டாய கட்டளையை
உணர்ந்து பிம்பம்
உங்களை உடைப்பதற்குள்
அதனை உடைத்தெறிந்து
உண்மையை நோக்கி
நகர்தலே பரிணாமம் !

கய"மை"


*
அன்றாடங்காச்சியாய் காசிற்கு
அலையும் ஏழைகளையும்
கவலைகொள்ளாது இன்பமாய்
திரியும் எசமானர்களையும்
வர்க்கவேறுபாடு அறிய
வரையும் அடையாலமை

*
தன் உழைப்புக்கூலியை
தானே யாசகமாய்
ஏந்திபெற்று இதன்பின்னரும்
திருடுபட்டம் காரணம்காட்டி
அவன்கையில் மையிடுதல்
சுயமரியாதைக்கோர் முற்றுப்புள்ளி

*
ஓடுபவனை காலுடைத்து
கையிலிருப்பதை பறித்து
வரிசையில் காத்திருக்கவிட்டு
நீவீரிடும் கரும்புள்ளி
காசுள்ளவனை கப்பலேற்றி
இல்லாதவனை கழுதைமேல்
ஏற்ற வைக்கும் கரும்புள்ளி

*
நூறுகோடி மக்களின்
குறலறியா மன்னன்
தன்பிம்பம் சுயலாபம்
எனும்சிறு புத்தியில்
தீட்டும் திட்டம்மும்
ஈட்டும் சட்டமும்
அடிபணியும் மக்களும்
இது "சர்வாதிகாரம்"
என்று குத்தப்பட்ட
ஐ.எஸ்.ஒ முத்திதரை

-கையில் மை!

தொடர்"ச்சீ"

உதிரக்கண்ணீர் பெரும்
அருவியாய் கொட்டி
காலமெல்லாம் கட்டுண்ட
கரங்கள் இப்பொழுது
வெட்டுண்டு துடிப்பதை
வெறுமனே பொறுத்திருக்க

நீலிக்கண்ணீர் வேடமிட்டு
வரதொடங்கும் முன்
அறியா அடிமைகள்
வெட்டுண்டு துடிதுடிக்கும்
கரங்கள் கொண்டு
அக்கண்ணீர் துடைத்து
ஆறுதல் அடைகிறது

நாட்டுக்காகவென நம்
தியாகங்கள் தொடர 
ஓட்டுக்காக அவர்கள்
வேடங்கள் தொடர்கிறது...

வெறுமை

1...2...3...4...5...6...7...8...9...10...
.................................................
.................................................
.................................................
..................43,19,999...43,20,000
என்று 43,20,000 வரை
50,00,00,000 முறை
எண்ணவும்...

இது "வெறும்"
50,00,00,000
"வெட்டி" உயிரின்
43,20,000
"வெற்று" நொடிகள்

போலி நாடக ஆட்டத்தை
நிறுத்திவிட்டு சிந்தித்தால்
உணரக்கூடும் இந்த
நெடிய நொடிகளில்
"வெறுமையை"

புதிய இந்தியா

புதிதல்ல
ஏதும்
புதிதல்ல

மக்கள் அவதிப்படுவதும்
தியாகங்கள் செய்வதும்
காத்திக் கிடப்பதும்
காசிற்கு அலைவதும்

பொறுத்துக்கொள்வதும்
கஞ்சிகலைவதும்
கடன்படுவதும்
கண்ணீர்வடிப்பதும்

கவலைகொள்வதும்
அறியாமையிலிருப்பதும்
வாய்மூடிக்கிடப்பதும்
ஏமாற்றப்படுவதும்

எங்களுக்கு இதெல்லாம்
பழகிவிட்டது
உங்களைப்போலவே

உங்களுக்கு ஏமாற்றி
எங்களுக்கு ஏமாந்து

உங்களிடம் எங்களுக்காக
கருணை எதிர்பார்க்கவில்லை
உங்களுக்காவே கேட்டிறேன்

இப்படி ஒரே அடியாய்
எங்களை ஏமாற்றி
"கொன்றுவிட்டால்"
அடுத்து நீங்கள் ஏமாற்ற
நாங்கள் இருக்கமாட்டோம்.

அலுவல்-இடைவேளை

குழப்பமுற்ற நாட்கள்
உறக்கமற்ற இரவுகள்
தெளிவற்ற பயணங்கள்
அழுத்தமுறும் பொழுதுகள்

குளிர்மர நிழலாய்
சிறிய கவனச்சிதறல்
அவளுக்கு தேநீர்
எனக்கு அவள் !!!