தொடர்"ச்சீ"

உதிரக்கண்ணீர் பெரும்
அருவியாய் கொட்டி
காலமெல்லாம் கட்டுண்ட
கரங்கள் இப்பொழுது
வெட்டுண்டு துடிப்பதை
வெறுமனே பொறுத்திருக்க

நீலிக்கண்ணீர் வேடமிட்டு
வரதொடங்கும் முன்
அறியா அடிமைகள்
வெட்டுண்டு துடிதுடிக்கும்
கரங்கள் கொண்டு
அக்கண்ணீர் துடைத்து
ஆறுதல் அடைகிறது

நாட்டுக்காகவென நம்
தியாகங்கள் தொடர 
ஓட்டுக்காக அவர்கள்
வேடங்கள் தொடர்கிறது...

No comments:

Post a Comment