புதிய இந்தியா

புதிதல்ல
ஏதும்
புதிதல்ல

மக்கள் அவதிப்படுவதும்
தியாகங்கள் செய்வதும்
காத்திக் கிடப்பதும்
காசிற்கு அலைவதும்

பொறுத்துக்கொள்வதும்
கஞ்சிகலைவதும்
கடன்படுவதும்
கண்ணீர்வடிப்பதும்

கவலைகொள்வதும்
அறியாமையிலிருப்பதும்
வாய்மூடிக்கிடப்பதும்
ஏமாற்றப்படுவதும்

எங்களுக்கு இதெல்லாம்
பழகிவிட்டது
உங்களைப்போலவே

உங்களுக்கு ஏமாற்றி
எங்களுக்கு ஏமாந்து

உங்களிடம் எங்களுக்காக
கருணை எதிர்பார்க்கவில்லை
உங்களுக்காவே கேட்டிறேன்

இப்படி ஒரே அடியாய்
எங்களை ஏமாற்றி
"கொன்றுவிட்டால்"
அடுத்து நீங்கள் ஏமாற்ற
நாங்கள் இருக்கமாட்டோம்.

No comments:

Post a Comment