கய"மை"


*
அன்றாடங்காச்சியாய் காசிற்கு
அலையும் ஏழைகளையும்
கவலைகொள்ளாது இன்பமாய்
திரியும் எசமானர்களையும்
வர்க்கவேறுபாடு அறிய
வரையும் அடையாலமை

*
தன் உழைப்புக்கூலியை
தானே யாசகமாய்
ஏந்திபெற்று இதன்பின்னரும்
திருடுபட்டம் காரணம்காட்டி
அவன்கையில் மையிடுதல்
சுயமரியாதைக்கோர் முற்றுப்புள்ளி

*
ஓடுபவனை காலுடைத்து
கையிலிருப்பதை பறித்து
வரிசையில் காத்திருக்கவிட்டு
நீவீரிடும் கரும்புள்ளி
காசுள்ளவனை கப்பலேற்றி
இல்லாதவனை கழுதைமேல்
ஏற்ற வைக்கும் கரும்புள்ளி

*
நூறுகோடி மக்களின்
குறலறியா மன்னன்
தன்பிம்பம் சுயலாபம்
எனும்சிறு புத்தியில்
தீட்டும் திட்டம்மும்
ஈட்டும் சட்டமும்
அடிபணியும் மக்களும்
இது "சர்வாதிகாரம்"
என்று குத்தப்பட்ட
ஐ.எஸ்.ஒ முத்திதரை

-கையில் மை!

No comments:

Post a Comment