இறைவி

மெய்மையை பொய்மையாய்
பொய்யையே மெய்யாய்
போலியாய் புரளியாய்
ஓயாது உரைத்தாய்

பெண்மையின் மேன்மையை
மென்மைக்குள் ஒளித்தாய்
வலிய வன்மையை
வன்மத்துள் வதைத்தாய்

கொடுமையும் கெடுதலும்
ஒடுக்கமும் பகடியும்
இன்னபல இன்னலும்
இன்னமும் இழைக்கும்
இழிநிலை மனிதா

உண்மையில் பெண்மையை
துச்சமென்று எண்ணும்
ஆண்மையின் உச்சமும்
பெண்மைக்கு துச்சமே !!!

சுழற்சி/பிறழ்ச்சி?

பிறப்பது வாழ்வதற்கு
வாழ்வதற்கு பணம்தேவை
பணமீட்ட வாழ்கையிலே
தொலைகின்றது வாழ்க்கையே !!