முறைமை

எழுதாமலே கிழிந்த காகிதம்
படிக்காமலே அரித்த ஏடு
உடுத்தாமலே நைந்த உடை
சூடாமலே வாடிய மலர்
உண்ணாமலே கெட்ட உணவு
.      .      .     .     .     .      .     .     .     .     .

என சிற்சில ஏக்கங்களில் உழலும்
மனிதன் உணரத் தவறுவது

வாழாமலே கழிந்த வாழ்வு

நட்பு

அற்ப மனித வாழ்வில்
சொற்ப கால கெடுவில்
கற்பதும் அழியும் விரைவில்
அற்புதம் ஏது உலகில்

அதிசயம் ஒன்று உண்டெனில்
அது தான் மனித உறவுகள்
அன்னையும் பிதாவும் உயிர் தந்தார்கள்
அதனால் உயிர்மீது உயரன்பு கொண்டார்கள்
கணவனும் மனைவியும் உறவு கொண்டார்கள்
கனிவுடன் நல்ல காதல் செய்தார்கள்
பிள்ளைகளும் நம் உயிரின் துளிகள்
பாசங்களால் நம்மை ஆட்டி வைத்தார்கள்
பாட்டன் பாட்டி அண்ணன் தம்பி
அத்தை மாமன் என அனைவர்க்கும்
குருதி வழியே பிரியம் பயணம்

உள்ள உறவுகளில் உள்ளம் மட்டும் உறவாக
உயர் அன்பு மட்டும் வரமாக
உயிரும் உடலும் மறந்த உறவெனில்
அது நட்பைத் தவிர வேறேதும் உண்டோ
நட்பினும் உயர்ந்தது வேறேதும் உண்டோ

கேளாமல் வருவதும் நட்புதான்
கேளாமல் தருவதும் நட்புதான்
எதிர்பாராமல் பகிர்வதும் நட்புதான்
எதிர்காலம் நிறுவதும் நட்புதான்

மகிழ்ச்சியின் முதலீடு நண்பன்
சோகத்தில் சுமைதாங்கி நண்பன்
இன்பத்தை இயற்றுபவன் நண்பன்
ஆபத்தில் ஆண்டவன் நண்பன்

நண்பர்களை பாடினால் காவியம் கனத்துப்போகும்
நண்பர்கள் நகர்ந்தாள் காதலும் தோர்த்துப்போகும்
நண்பர்கள் பேசினால் சொற்களும் தீர்ந்துபோகும்
நண்பர்கள் நீங்கினால் இயற்கையும் நீத்துப்போகும்
நண்பர்கள் இல்லாவிடில் இவ்வையமே மரித்துப்போகும்

வாழ்வு தருவது யாராயினும்
வாழ்விற்கு பொருள் தருவது நண்பர்கள் !!!

என் வாழ்விற்கு பொருள் தரும் நண்பர்களுக்கு
நண்பர்தின நல்வாழ்த்துகள்

(மூன்றாண்டிற்கு முன்பு நண்பர்கள் தினத்தில் எழுதியது)

​கிழிபடும் கவிதை

நல்ல கவிஞன்
காலம் கிழிக்கும் முன்
தன் கவிதையை
தானே கிழிக்க தெரிந்தவன் !!!