பொங்கல் வாழ்த்துக்கள்

தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களின் எச்சமாக மிச்சமுள்ளது பண்டிகைகளின் கொண்டாட்டங்களாகிய விழாக்களே... அந்நியசத்தி, அரசியல்சத்தி, அநியாயசத்தி, அறியாமைசத்தி, அலச்சியசத்தி  என அனைத்து  அனாவசிய சதிகளும் சத்திபெற்று நமது உணர்வுகளை மென்று தின்று தீர்த்தும் பசி வேட்கை அடங்காது மீதமுள்ளவற்றையும் தின்ன எத்தனித்துக்  கொண்டிருக்கையிலே, நம் தமிழர் விழாக்களில் தலையாய விழாவாகிய பொங்கல் திருவிழாவின் இன்றியமையாமையையும் அதன் தொடர்சியாகிய அனைத்து  நிகழ்வுகளையும் கொண்டாடி மகிழ்வதுடன், அடுத்துவரும் அத்துணை தலைமுறைக்கும் விட்டுச்செல்வோம் !

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், தைத்திருநாள் , தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!  


No comments:

Post a Comment