கவியின் தோற்றம்

ஞாயிறு முளைக்குது
ஞாயிறு முளைக்குது
என் சிந்தைக்குள்ளே
மிளிர்ந்து சொலிக்குது

திங்கள் திரியுது
திங்கள் திரியுது
என் அகத்திணை
அடக்க திமிர்ந்து திரியுது
ரத்தநாளங்கள் சுற்றி தேயுது
ஞாயிறை தணிக்க
நித்தம் நெருங்கி வளருது

பிராணன் தவிக்குது
பிராணன் தவிக்குது
ஞாயிறு திங்களில்
சுழன்று தவிக்குது

நீர் சுரக்குது
நீர் சுரக்குது
காயக்கடல் அலை
புரண்டு பிறக்குது
கண்களில் கழன்று
கட்டவிழ்ந்து கொட்டுது

வையமென் வழியே
வழிகேட்டு விழிக்குது
திக்கற்று கிடக்குது
ஏங்கி தவிக்குது

இயற்கையும்
இயற்கைசக்தியும்
திமிர்ந்து எழுந்து
கரம் வழி
புறம் விழுந்தோடுது

இனி நில்லாது
நடக்கும் எம்கவி
இதில் செழித்து
தழைக்கட்டும் இப்புவி !!!

No comments:

Post a Comment