தீப ஒளி


தீப ஒளி திருநாள்...
மின்சாரம் இழந்த மாநிலத்தில்
தினம் தினம் தீப ஒளி திருநாள்...

ஆயினும்,
தினமும் இந்த உற்சாகம் இல்லையே
மகிழ்ச்சியோ, பகிர்தலோ, கொண்டாட்டம் இல்லையே.?

ஏன்?
தினமும் பட்டாசு வெடிக்க பொருளாதாரம் இல்லாததலா?
பலகாராம், புத்தாடை, தொலைகாச்சி நிகழ்சிகள் இல்லாததலா?
உறவினர்கள், நண்பர் கூட்டம், விடுமுறை இல்லாததலா?

காலசுழற்சியில்,
கால அட்டையை பார்த்து தானோ மகிழ்ச்சி வரும்?
அனைத்தையும் மறந்து ஓடிக்கொண்டு இரருக்கையில்,
அண்டை வீட்டை பார்த்து தானோ அன்பு வரும்?
விடுமுறை விட்டால் தானோ விடுதலை ?

ஏன்?
மகிழ்ச்சியை மனதில் புதைத்துவிட்டு ,
வெளியே ஏதேதோ கண்டு,
மகிழ்ச்சி இது தானோ என்று எண்ணி,
மகிழ்வது போல உலவி கொண்டு இருகின்றோம்...

இனி,
மனதில் விளக்கேற்றி, அறியாமையை கொளுத்தி,
நம்பிக்கையை உண்டு, அன்பை பருகி,
தினம் தினம் தீப ஒளி திருநாள் கொண்டாடுவோம்....

No comments:

Post a Comment