ஒத்துழைப்பு நல்குக

கொடுங்கோலன் பெருங்காலன்
நெடுநாள்அவா, குறிக்கோள் ஈடேற
பீடுநடை வெறிகொண்ட வேகம்

நீண்ட நெடிய பட்டியல் இல்லை
இரண்டே இரண்டு இலக்கு தான்

நாட்டுமக்களை பெருநிறுவனத்திற்கும் 
நாட்டை வெளிநாட்டிற்கும் விற்றுவிட்டால்
ஜென்மசாபல்யம் அடைந்திடுவார்

ஆடுவெட்ட பொறுமைகாக்கும் சம்பிரதாய
சம்மதம்கூட சாத்தியமில்லா நிலையில்
வெட்டிவீழ்த்தப்பட்டுவிட்டது சனநாயகம்

அடிமைகளுக்கு ஓர் வேண்டுகோள்
அவர்களுக்கு ஏதுவாக தலைகொடுங்கள்
அவர்கள் வெட்டியெறிவதற்காகவே
படைக்கப்பட்டவர்கள் தாம் நாம்

No comments:

Post a Comment