பதின்மத்தின் சாளரத்தில்
சமூக சாலையை
காணும் கணமெல்லம்
புத்தியிலே பூக்கும்
புரட்சிகர பூகம்பம்
உதிரும் உக்கிரம்
அடங்கா அகத்தினூடே
ஆங்காங்கே அள்ளித்
தெறிக்கும் எரிகுழம்பாய்
அமிலமழை கவிதைகள்
காகிதகருவி கொண்டு
ஆயுதப்போர் எடுக்க
ஆயத்தமான வேளையில்
அடகுவைக்க நேர்ந்தது
உப்புபுளிக்கு மாற்றாக.
-01/12/2021
No comments:
Post a Comment