முறைமை

எழுதாமலே கிழிந்த காகிதம்
படிக்காமலே அரித்த ஏடு
உடுத்தாமலே நைந்த உடை
சூடாமலே வாடிய மலர்
உண்ணாமலே கெட்ட உணவு
.      .      .     .     .     .      .     .     .     .     .

என சிற்சில ஏக்கங்களில் உழலும்
மனிதன் உணரத் தவறுவது

வாழாமலே கழிந்த வாழ்வு

No comments:

Post a Comment