அடக்கம், அடக்கம்!
கைக்குள் அடக்கம்,
இவுலகம் கைக்குள் அடக்கம்,
நிலையான அடக்கம் கொடுக்கும்,
இது ஏழு உலகங்களையும் கடக்கும்,
புதியதோர் இனம் படைக்கும்,
சினம் துறந்த ஏழாம் அறிவு கொடுக்கும்.
இதயம் கூடுதலாய் துடிக்கும்
பல காலம் கூடுதலாய் துடிக்கும்.
பொல்லாத வினையை அறவே தடுக்கும்.
எந்த யுகத்திற்கும் ஏற்ற வியாபாரம்
ஆம் நான் கண்ட நட்டமில்லா ஒரே வியாபாரம்.
அள்ள அள்ள பெருகுமாம்,
கொடுக்க கொடுக்க செழிக்குமாம்.
எழுதுகோல் மை உமிழ
எழுத்தர் கற்பனை மழை பொழிய
கருத்துகள் கவிதையை நீந்த
காகித மரங்கள் செழித்து வளர
மனிதன் கண்ட அற்புத புதையல்
-புத்தகப் புதையல்
எழுத்தர் கற்பனை மழை பொழிய
கருத்துகள் கவிதையை நீந்த
காகித மரங்கள் செழித்து வளர
மனிதன் கண்ட அற்புத புதையல்
-புத்தகப் புதையல்
No comments:
Post a Comment